Thursday 26 May 2011

வாய் இறுகு நோய்





வாய்  இறுகு நோய்




நோயின் தன்மை :
கன்னத்து உட்புறதசைகள்  அதன்  இலகு தன்மை இழந்து இறுகிப்போய் வாய் திறப்பது  கடினமாகும் இந்நிலையே  வாய் இறுகு நோய்.

வாயின்  சதைகளில் ரத்தஓட்டம்  குறைந்து சதை வெளிறி காணப்படுதல் எரிச்சல்,வாய் உலர்ந்து போதல் , சுவை அறியும் திறன் குறைதல் போன்றவை இதன்  அறிகுறிகள்.சில நேரங்களில் குரல் மாற்றம் , கேக்கும் தன்மை குறைதல் போன்றவையும் ஏற்படலாம்.
பொதுவாக நான்கு விரற்கிடை திறக்கும் வாய்,இரண்டு விரற்கிடைக்கும்  குறைவாய் திறத்தல் இந்நோயின் கொடுமையை உணர்த்தும் 

காரணிகள் :
பொதுவாக பான்பராக் ,  பாக்கு  , புகையிலை , அதிகமான காரம்  பயன் படுத்துவோர் ,வைட்டமின் சத்து குறைபாடு  உள்ளவர்கள் இதனால் எளிதில் பாதிக்கப்படும்  வாய்ப்புகள் அதிகம்.

 பாக்கு , தம்பாக்கு, புகையிலை, அதிக காரம்  போன்றவற்றை
தவிர்த்தல்,இரும்பு சத்து ,வைட்டமின் அதிகம் உள்ள உணவு
அதிகமாய் எடுத்தல் , அவ்வப்போழுது பல் மருத்தவரை காணுதல்,
வாய் நலம் பேணுதல், நலம் தரும் .


துவக்க நிலையில் பான்பராக்,பாக்கு  நிறுத்தல்
காபி , டீ,  ஆல்கஹோல் தவிர்த்தல் , மற்றும் சில எளிய வாய் திறக்கும் பயிற்சிகள் போதும்.
முற்றிய  நிலையில் ஸ்டிராய்ட் இன்ஜெக்சன் தரும் முறையும்,
அறுவை சிகிச்சையும்  தற்சமயம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஸ்டெம்  செல் கொண்டு மருத்துவம் செய்தல் குறித்த
ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று வருகின்றன.









.
.
.

4 comments:

  1. நல்ல தகவல் நன்றி..

    ReplyDelete
  2. எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    ReplyDelete
  3. Enakku adikkadi pal koocham varukirathu.enna seivathu

    ReplyDelete